எனது எண்ணங்களை தூண்டும், நமது இந்திய மக்களை பாதிக்கும் விசயங்களையும், உலகின் பழைமையான நகரமும், இன்றும் அதன் கலாச்சாரத்தை முற்றிலும் இழக்காத, 2500 வருடமாக இருக்கும் ஒரே நகரமான என் மதுரையைப் பற்றி எழும் எனது எண்ணங்களை இங்கு தெளித்துள்ளேன். 'வசந்த காலம் நாளை ஆரம்பம் ஆகும், ஏனென்றால் குளிர் காலம் வெகுநாட்களாக நீடித்து விட்டது' என்ற ஜேம்ஸ் கவனவ் கவிதையை நினைத்து காலம் மாறும் வசந்த காலம் வரும் என்ற நம்பிக்கையில் என் கொந்தளிப்புகளை எழுத்தில் வடித்தவை இவைகள்.